கோலாலம்பூர், ஏப்ரல் 22 : வரும் மே முதலாம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பி,எஸ்.எம். கட்சி ஏற்பாடு செய்யும் மாபெரும் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் கூறினார்.
நாங்கள் அப்பேரணிக்கு அனுமதி வாங்கவில்லை என்பதால், அன்றைய தினம் அப்பேரணியை நடத்த முடியாது என்று போலீசார் கூறியிருந்தாலும் அது திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அவர் சொன்னார்.
இப்பேரணிக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. காரணம் நாங்கள் அனைவரும் பொதுமக்கள் கூடும் இடங்களில்தான் கூடி நிற்கப் போகிறோம் என்றார்.
இதற்காக போலீஸ் அனுமதி பெற வேண்டியதில்லை. காரணம் அன்றைய தினம் புக்கிட் பிந்தாங்கின் லாட் 10 பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சொன்னார்.
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற தொழிலாளர் பேரணி நடத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுவது வழக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 23 ஆண்டுகளாக ஆண்டுத்தோறும் இப்பேரணியை நடத்தி வந்துள்ளோம். இறுதியாக நாங்கள் மாஜூ முச்சத்தியிலிருந்து மேடான் பசாரை நோக்கி செல்வோம். இதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை என்றார்.
2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் விதிமுறைகளை ஏற்பாட்டுக் குழுவினர் ஒருபோதும் மீறவில்லை. காரணம் இப்பேரணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே போலீசாரிடம் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் அவர் சொன்னார்.
இந்த அமைதி பேரணியை மலேசிய மனித உரிமை ஆணையமும், மலேசிய வழக்கறிஞர் மன்றமும் தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும் அவர் சொன்னார்.
ஏற்பாட்டுக்குழுவினர் இப்பேரணியை நடத்தக் கூடாது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முகமட் சுக்ரி கமான் கூறினார்.
தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ட சம்பளமாக 1,500 வெள்ளி சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு வேலை கொடுப்பதில் ஆண் – பெண் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும் இப்பேரணியில் முன்வைக்கப்படும். –தி மலேசியன் டைம்ஸ்
0 comments :
AMARAN!!!! Komen jahat akan di padam,