கோலாலம்பூர், ஏப்ரல் 22 : நாட்டில் மக்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு விசித்திரமான சடங்குகளை செய்து மந்திரவாதி மன்னன் என அழைக்கப்பட்டு வந்த இப்ராகிம் மாட் எனும் உண்மைப் பெயரைக் கொண்ட மந்திரவாதி நேற்று ஜோகூர், சிகாமாட்டில் கைது செய்யப்பட்டார்.
நேற்று பின்னிரவு 2.30 மணியளவில் சிகாமாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அண்மைக்காலமா பல விசித்திரமான சடங்குகளை செய்து வந்ததால் பலரின் சர்ச்கைக்குள்ளாகி வந்தார்.
ஆகக்கடைசியாக வட கொரியாவிற்கும் மலேசியாவிற்குமிடையே பதற்ற நிலை ஏற்பட்டபோது மலேசியாவை பாதுகாக்கும் வகையில் கடந்த 13.3.2017ஆம் தேதி தலைநகர், கோலாலம்பூர் மருத்துவமனையின் தேசிய தடவியல் கழகத்தின் முன்புறம் விசித்திரமான சடங்குகளை செய்தார்.
அவரின் அச்செயல்கள் இஸ்லாமிய சமய முறைக்கு எதிரானது என்பதால், அவரின் நடவடிக்கையில் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ ஒஸ்மான் முஸ்தாபா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மந்திரவாதியின் நடவடிக்கை இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரின் செயலை கண்காணிக்குமாறு பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் அஷ்ய்ரா·ப் வஜிடி டுசுக்கி உத்தரவிட்டிருந்தார்.
காணாமல் போன எம்.எச். 370 விமானத்தை தேடுவதாக அவர் வினோதமான செயல்களைப் புரிந்ததும் இதில் அடங்கும். –தி மலேசியன் டைம்ஸ்
0 comments :
AMARAN!!!! Komen jahat akan di padam,